தஞ்சாவூாில் அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்புகள்
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் சுகாதாரப் பணியாளர், ஒலிப்பதிவாளர் & பேச்சு சிகிச்சையாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எஸ்சி, எழுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக புதுக்கோட்டை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.
நிறுவனம் : தஞ்சாவூர் அரசு மருத்துவமனை
பணியின் பெயர் : சுகாதாரப் பணியாளர், ஒலிப்பதிவாளர் & பேச்சு சிகிச்சையாளர்
கல்வித்தகுதி : எழுத்தறிவு
பணியிடம் : தஞ்சாவூர்
தேர்வு முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
மொத்த காலியிடங்கள் : 02
கடைசி நாள் : 20.06.2022
முழு விவரம் : http://alljobopenings.in/wp-content/uploads/2022/05/thanjavur-gmch.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் புலன் விசாரணையிலுள்ள கஞ்சா வழக்குகள், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்படாமல் இருந்த வழக்குகள் குறித்து கடந்த முதல் வரை சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனடிப்படையில் 9 மாவட்டங்களில் புலன் விசாரணையில் இருந்த 699 கஞ்சா வழக்குகளில், கடந்த ஒரு வார காலத்துக்குள் மட்டும் 262 வழக்குகளின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 66, கரூரில் 4 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்படாமல் இருந்தவற்றில் 27 வழக்குகளில் தற்போது நீதிமன்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் ஒரு வழக்கிலும், திருவாரூரில் ஒரு வழக்கிலும் கஞ்சா விற்பனை செய்தவருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
இதுதவிர அதிகளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான, வணிக நோக்கத்துக்கான கஞ்சா கடத்தியது தொடர்பாக 3 வழக்குகளில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இதே பிரிவின் கீழான 2 வழக்குகளில் தற்போது நீதிமன்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புலன் விசாரணையிலுள்ள கஞ்சா வழக்குகளில் விசாரணையைத் துரிதப்படுத்தி குற்றவாளிகள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எஸ்க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை திருச்சி, தஞ்சாவூர் சரக டிஐஜிக்கள் தினமும் கண்காணித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியாளர்களாக ஏழு பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தட்டச்சுத்தேர்வு எழுதி தேர்வானதாக போலிச்சான்று சமர்ப்பித்து, பதவி உயர்வு வாங்கியுள்ளனர். இந்த சான்றிதழ்களை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் ஆய்வு செய்தபோது ஏழு பேரும் போலியாக சான்று பெற்றுள்ளது தெரியவந்தது.
இதற்கு உதவிய தனியார் தட்டச்சு பயிற்சிப்பள்ளி நிறுவனத்தின் உரிமத்தையும் ரத்து செய்தும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது போலிச்சான்று தந்து பதவி உயர்வு பெற்ற பல்கலைக்கழக ஊழியர்கள் ஏழு பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும்; தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
இது தவிர மேலும் பலர் போலிச்சான்று சமர்ப்பித்து அரசுப்பணிகளில் தொடர்வதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தாயும் மகளும் நடத்திய போலி நிறுவனம் வழியனுப்ப சென்றபோது அதிரடியாக கைது
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் சுகாதாரப் பணியாளர், ஒலிப்பதிவாளர் & பேச்சு சிகிச்சையாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருக்கும் குடோன்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக மாநகர நகர் நல அலுவலர் பிரேமாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி நகர் நல அலுவலர் பிரேமா தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடோன்களுக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அரசினர் பெண்கள் கல்லூரி பின்புறம் இருக்கும் 2 குடோன்களில் பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து 10 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பின் இரண்டு குடோன்களையும் பூட்டி சீல் வைத்தனர். இதனை அடுத்து பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தாலோ அல்லது பதுக்கி வைத்து விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்
திருவையாறு (தஞ்சாவூர்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), வாணியம்பாடி (திருப்பத்தூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) தலா 2, ஹரூர் (தர்மபுரி), கூடலூர் (தேனி), சீர்காழி (மயிலாடுதுறை), தரமணி (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), திருமானூர் (அரியலூர்), நன்னிலம் (திருவாரூர்), வீரகனூர் (சேலம்), வலங்கைமான் (திருவாரூர்), போளூர் (திருவண்ணாமலை), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), தம்மம்பட்டி (சேலம்), எறையூர் (பெரம்பலூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), பாடலூர் (பெரம்பலூர்), திருவாரூர் (திருவாரூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் A (செங்கல்பட்டு), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), தேவாலா (நீலகிரி) செட்டிகுளம்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :
மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சூறாவளி காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஆந்திர கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கேரள மற்றும் லட்சதீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திர கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஒரிசா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
You must be logged in to post a comment.