உன்னோடு உன் அருகில் நான் இருப்பேன் உன் துனையாக உன் கை கோர்த்து உன் காப்பாலனகா
காத்திருப்பேன் உன் கை கோர்க நேரம் வரும் வரை மிகவும் பிடித்த
பொருளொன்று
தொலைந்து
மீண்டும்
கைகளில்
கிடைத்தது போல்
மனம் மகிழ்வில்
உனை காணாமலிருந்து
கண்கள் கண்டதும்
நீ என் இதயத்தின் மூச்சு காற்றாக நான் உயிர் வாழ என்னோடு தொடர்து பயணிக்க நான் ஏங்குறேன்
காதலில் சத்தமின்றி
ஒரு முத்தம்
தினமும் உனக்கு
நீயறியாமல் கொடுத்து
மகிழ்கிறேன்
மௌனமாய் மனதுக்குள்
இனைந்து அன்பை பரிமாரி கொள்ள மனம் தவிக்கின்றது என் கை சேர்வயா பெண்ணே
உனது வருகையே
நிர்ணயிக்கும்
எனக்கான
மணித்துளிகள்
உறைவதையும்
உருகுவதையும்
இருளெனை
சூழ்ந்து கொண்டாலும்
உன் நினைவொளியில்
வாழ்வேன்
நானும் அழகிய
உலகில் உன்னோடு விழிகள் உறங்கிட
மறுக்கும்
போதெல்லாம்
உறங்க வைக்கிறான்
முத்த சத்தத்தில்
தாலாட்டி மனதை இரும்பாக்கி
கொண்டாலும்
இழுக்கின்றதே
உன்திசை நோக்கி
உன் நினைவும்
என்ன காந்தமா ஜன்னலை தீண்டும்
தென்றலாய்
மனதை தீண்டி
உயிர் புள்ளிவரை
சென்று
எனை ஆள்கிறாய்
அன்பே
நீ அருகில்
இல்லையென்ற
வெறுமையில்லை
நொடியேனும்
நகராது
உன் நினைவு
உடனிருப்பதால் உன் நெற்றி
தீண்டும் போதெல்லாம்
நீ திலகமிட்ட
அழகிய தருணம்
என்னுள்ளும் என்னவனே நீ நீயாகவே
இருப்பதால்
உனை எனக்கு பிடிக்கும்னு
ஆரம்பிச்சி
எனக்காக மாறு என்பதில்
தொடங்குது பிரிவும
பிரச்சனைகளும் மண்ணில் விழுந்த
மழை துளியாய்
உன் மனதோடு
தொலைந்து விட்டேன்
என்னுயிரே விலகலில் இல்லை
வாழ்க்கை
உன் விழிகளில்
என்றுணர்ந்தேன்
என்னவனே என் தேடலென்று
எதுவுமில்லை
நீ தொலையாத
வரையில்
நீரின்றி
உலகுமில்லை
நீயில்லையெனில்
எனக்குலகமும் இல்லை
உயிரே உன்னை
வாசித்ததைவிட
உன்னில் சுவாசித்ததே
அதிகம் நான் நித்தம்
ஒரு புத்தம்புது
விடியலாய்
நானும் புதிதாய்
பிறக்கின்றேன்
உன் நினைவு
சாரல்
எனை நனைக்க நீ விழிகளில்
கவிதை எழுத
என் விழிகளுக்கு
மையிடுகிறேன்
மையலோடு அசைபோடும்
உன் நினைவில்
அசைவற்று
காத்திருக்கு
விழிகள்
நீ வருவாயென மௌனமும்
பேசுமென்று
உணர்ந்தேன்
உன்னருகில் தனித்து சென்றாலும்
தனித்து சென்றாலும்
துரத்தி வருகிறாய்
நினைவாகி என்னை
விட்டு பிரியும்
தருணத்தில்
மொத்த காதலையும்
கொட்டுகிறேன்
உன் கரத்தினுள்
என் கையை
பற்றிக்கொள்ளேன்
என்று
உன்னால்எனக்கு
பிடித்ததைவிட
உனக்கு
பிடித்தவைகளையே
மனமும் விரும்பி ரசிக்கின்றது
மனமும் குழந்தை தான்
உன்னையே
நினைப்பேன்
என்று பிடிவாதம்
பிடிப்பதில் சற்றே
நீ விலகினாலும்
இருளாகுது
என்னுலகம் கண்களை மூடினாலே
கனவாக வந்து
தங்கி கொ(ல்)ள்கிறாய்
விழிகளுக்குள் விலகாமல் கடிகாரமாய் நீயிரு
நொடி முள்ளாய்
உனை தொடர்ந்தே
நானிருப்பேன் உன் நினைவுகளாய்
நான் வாழ விரும்பவில்லை
உனக்கு நினைவு
இருக்கும் வரை
உன்னில் வாழ விரும்புகிறேன்
அத்தனை கோபங்களையும்
சட்டென
கரைத்து விடுகிறாய்
உன் குறும்புகளில்
ஆரவாரமில்லா
உன் காதலில்
ஆழமாய்
நானும் மூழ்கித்தான்
போகிறேன்
அழகாய்
நமக்கான உலகுக்குள்
எப்படி எழுதினாலும்
ரசிக்கின்றாய்
இதழ்வரி கவிதையை
சிரிப்பை சிதறவிடாதே
சிக்கி தவிக்குது
நாணமும்
உறங்க போகிறேன்
தேடாதே என்கிறாய்
உன் கனவே நான்தான்
என்பதை மறந்து (கவுத)
தென்றலாய் தீண்டுகிறாய்
புயலாய் சரிகிறது
மனம் உன்னிடத்தில்
ரசிக்க
சலிக்காத
கவிதை நீ
என் கண்களுக்கு
நீ என்னவன் என்பதில்
எப்போதும் எனக்கு
திமிர் அதிகம் தான்
யாருமற்ற சாலையில்
உடன் பயணிக்கிறது
உன் நினைவுகள்
மட்டும் பேரிறைச்சலுடன்
உதிர்ந்த சருகும்
உயிர் பெற்றது
உன் பார்வை
தீண்ட
தொலைவில்
நீயிருந்தாலும்
உனை கையிலேந்தி
ரசிப்பேன் காதலுடன்
நிலவுப் பெண்ணே
தவிர்க்க முடியாத
காலை நேர
தேனீராய்
நம் நினைவுகளையும்
நான் சுவைக்க
தவறுவதில்லை
அன்பே
கடினம் தான்
ஆனாலும் சுகம்
நீ வருவாய்
என்ற நினைப்பே
காத்திருப்பில்
சென்றபோதும் தங்கிவிட்டாய்
மனதில் வந்த
வழியை பார்த்து
ரசிக்கிறது விழியும்
மீண்டும் வருவாயென
ஒவ்வொரு முறையும்
பிரியங்களை அதிகமாக
அள்ளித் தெளித்தபடியே
செல்கிறது உன் பிரிவு
அதிகாலை ஆதவனாய்
ஆழ் மனதுக்குள்
தோன்றி
உறக்கத்தயும் கலைத்து
விடுகின்றது
உன் நினைவு
பக்கத்தில் நீயில்லாத
போதும்
வெட்கத்தில் தடுமாறுது
வார்த்தைகளும்
எங்கிருந்தோ
உன் குரல் அழைக்க
ஊடலும் கரைந்தது
நீ அன்பால்
கலந்துதந்த
ஒரு கப் காப்பியில்
போகாதே என்ற
கெஞ்சலுக்காகவே
மிஞ்ச தோணுது
உன் வார்த்தையை
அருகில் இல்லாமலேயே
எனை இம்சிக்க
உன் அன்பினால்
மட்டுமே முடியும்
எனதன்பே
கலைந்த கனவுகளை
சேர்த்து கோர்த்து
ரசிக்கின்றேன்
வந்தது நீயல்லவா
கண்களுக்குள்
கட்டுப்பாடு விதிக்கா
உன் நேசத்தில்
கட்டுண்டு கிடக்கும்
என் காதலும்
காலமெல்லாம் என்னன்பே
மெல்லிசையிலும்
மெ(இ)ன்னிசை
உன் நினைவு
என் பாதம்
தொடும் துளிகளை
பன்னீரெனப் பருகுகிறாய்
பாவமோ சாபமோ
எனையே சேரட்டும் அன்பே
பிரம்மித்து போகிறேன்
உன் மௌனத்திலும்
இத்தனை காதலா என்று
கண்மூடினால்
காட்சியாகிறாய் நீ
இருளில் நிலவாய்
மொத்த உலகமும்
அழகாய் தோனுது
சட்டென
உன் நினைவுகள் தீண்ட
நானுன்னை
நினைப்பது போல்
நீயுமென்னை நினைத்து
கொண்டிருப்பாய்
அல்லவா அன்பே
நீ உடன்
பயணிக்கும்
நொடிகளை போல்
வேறெதுவும்
எனை மகிழ்விக்காது
என்னவனே
உன்னைக்
காணாத பொழுதெல்லாம்
பார்வை இழக்கிறேன்
நான்
ஊருக்குத்தான் ஊரடங்கு
நம் உள்ளத்திற்கல்ல
என்று நான்
நினைத்தவுடன்
மனதுக்குள்
வந்து விடுகிறாய்
உலாவ அன்பே
அந்த நிலாவாக
முடியாத ஒன்றை
முயற்சித்து இருவரும்
தோற்று போகிறோம்
பிரிவிடம்
அரவணைக்கு
உன் மூச்சு
காற்றுக்குள்
அடைக்கலமானது
மனமும் இதமாக
எனக்காக காத்திருக்கிறாய்
என்ற நினைப்பே
உன்மீதான காதலை
இன்னும்
அதீத வலிமையாக்குது
விழிகளுக்கும்
இசை தெரியும்
என்று தெரியாது
உன் விழிகளை
காணும் வரை
கண்முன்
வந்து நிழலாடும்
உன் பிம்பத்திடம்
தாவிக் கொ(ல்)ள்கிறது
மனமும்
நீ சென்ற பின்பும்
இன்னும்
சற்று நேரம்
துயில்கொள்
ரசித்து கொள்கிறேன்
உன்னை
எனை கொல்லுமுன்
உன் விழிகள்
எதை வாசித்தாலும்
அங்கு வரிகளாக
வந்து நிற்பது
நீ பேசும்
வார்த்தைகளே
உன் காயங்களுக்கு
மருந்து
என் காதலென்றால்
உருவாக்குவேன்
ஒரு காதல்
தேசத்தை அன்பே
மருதாணியும் ஏனடா
உன் கரம்
பட்டாலே சிவக்குமே
என் பாதமும்
உன் காதலால்
நீந்தி விளையாடும்
காகித கப்பலாய்
அழகாய் நீயும்
மனதில் நீந்தி
எனை மூழ்கடிக்கிறாய்
உன் நினைவுகளால்
வெற்றிடம் என்பதே
கிடையாது
நீ வேரூன்றி
போனதால் உள்ளத்திலும்
உன் அடிமையாய்
நானும்
என் அரசனாய்
நீயும்
உனக்கான வேண்டுதலில்லை
நீயென்னுள் நலமாயிருப்பதால்
இது எனக்கான
வேண்டுதலே
நீயென்றும் நலமுடனிருக்க
வேண்டுமென்று
கொலுசொலியும்
இம்சைதான்
உன் நினைவிசையை
தூண்டிவிடும் போது
தட்டிவிட்ட போதும்
ஒட்டிவரும் மணலாய்
மனதை துரத்தும்
உன் நினைவில்
தடுமாறி போகிறேன்
நானும்
உன்னில் கிரங்கி
கிறுக்குவதெல்லாம்
கவிதையாகிறது
போர்க்களமின்றி
யுத்தம் செய்யும்
வித்தை
உன் விழிகளுக்கே
உண்டு
எங்கோ நீயிருந்தாலும்
எனை மறக்காமலிருக்கிறாய்
என்றுணர்கிறேன்
உன் மிஸ் யூ வில்
மனதில் மறைக்க
தெரிந்த எனக்கு
கண்களில்
மறைக்க தெரியவில்லை
உனை ரகசியமாய்
ரசிப்பதை
வான் திரைக்குள்
ஒளிந்து கொண்டாலும்
நிலவொளியின்
துணைக்கொண்டு
உனையடைவேன்
என்னவனே
கரை சேரும்
எண்ணமில்லை
நீந்துவது
உன் காதல்
கடலில் என்பதால்
மூழ்கினாலும்
அங்கே
நீ இங்கே
நான் நமக்கான
இடைவெளியில்
அழகாய்
பயணிக்கிறது
நம் காதல்
தடையின்றி
தொடரும்
உன் நிழலில்
அவ்வப்போது
இளைப்பாறுகிறேன்
நெடுந்தூர பயணத்தில்
கொந்தளிக்கு
உன் கோபத்தில் தான்
எத்தனை காதல்
அத்தனையும்
கொல்லுதே என்னை
ஒரு நொடியை
கடப்பதே
பல யுகமாயிருக்கும் போது
பல்லாயிர நொடிகளை
கடந்து விடு
என்கிறாய் நீயின்றி
ஆடி களைத்து
ஓய்ந்து கிடக்கும்
சிலம்பாய்
மனம்
உனை தேடி
களைத்து
ஓய்ந்து கிடக்கு
தீண்டலின் மென்மையா
இல்லை
உன் பார்வையின்
தாக்கமா
அசைவற்று போனது
என் கண்களும்
சாட்சிகள் ஏனடா
மன சாட்சியே
நீயான பின்
எதையும் விட்டுவைக்காமல்
அனைத்திலும்
கலந்து தொலைத்திருக்கிறாய்
நினைவாக பார்க்குமிடம்
எங்கும் உன் ஞாபகமே
என்னுள்ளும்
பல கவிதை
உனக்காக
அவ்வப்போது
ரசிக்கின்றேன்
மனதுக்குள்
நினைவு சின்னங்கள்
தேவையில்லை
உனை நினைக்க
நினைவே
நீயான பின்
மனமெங்கும்
உன் நினைவு
சுவையில்
ஆறிப்போனது
தேனீரும்
நீ தடுக்கும்
போதெல்லாம்
தவித்து போகுது
மனம்
இனி விலகலே
கூடாதென்று
நமக்கிடையில்
கண்ணனின் தனிமைக்கு
குழல்போல்
என் தனிமையில்
இசைக்கிறது
புல்லாங்குழலாய்
உன் நினைவுகள்
மனதை மயக்கியே
ஆதவனாய்
நீ சுட்டெரித்தாலும்
ஆனந்தமாய்
காத்திருப்பேன்
மனதில்
உன் நிழலை சுமந்து
சுவாசத்தில்
பிரித்திட முடியாத
காற்றாய் நீ
கண்முன் நடமாடா
விட்டாலும்
நீ என்முன்
தானிருக்கின்றாய்
கண்ணோடு
கலந்த காட்சியாய்
அலைப்பேசி அமைதியான
போதும்
அலைப்போல் ஆர்ப்பரிக்கிறது
உன் வார்த்தைகள்
எனை இம்சித்து
நீயோ வேராக
மறைந்து கொண்டாய்
உன் நினைவுகளோ
படர்கிறது கொடிபோல்
மனமெல்லாம்
மறந்திருந்தாலும்
மயக்குகிறாய்
மயிலிறகாய்
வருடி மனதை
வீழ்த்துவது கடினமல்ல
உனை அன்பில்
ஜெயித்திட வேண்டும்
என்பதே என்னிலக்கு
பிழை என்றாலும்
ரசிப்பேன் உனை
நீயென் கவிதையல்லவா
என் நாழிகைகள்
எப்போதும் அழகுதான்
நம் அழகிய
நினைவுகளோடு
நகரும் போது
என் சுவாசம்
நிறுத்தப்பட்டாலும்
உன் சுவாசம்
எனை உயிர்ப்பிக்கும்
மரணமே கிடையாது
நீயிருக்கும் வரை
உன் மனம்
வாடிட கூடாதென்றே
பாதுகாக்கிறேன்
நம் காதல்
மலரை வாடாமல்
நீ என்றோ
அனுப்பிய குறுஞ்செய்தி
எனை இன்றும்
காத்திருக்க வைக்குது
நீ வருவாயென
விழியில் பேசாதே
என் வார்த்தைகளும்
வழி மாறி தவிக்குதே
நிசப்த்த வேளையில்
உன் நினைவின்
ஓசையாய் மெட்டியொலி
அன்பெனும் பிடிக்குள்
சிக்குண்ட கரங்கள்
விடுவிக்க நினைத்தாலும்
விடுபடாது
புதைந்து போகிறது
என் கோபங்களும்
உன் காதலின் ஆழத்தில்
வருடும் மயிலிறகில்
உன் கரத்தின் மென்மை
கிறங்குகிறேன்
காதலில் மெல்ல
அத்தனை சேட்டைகளையும்
செய்துவிட்டு
அமைதியாய் உறங்கும்
குழந்தையாய்
பல நேரங்களில் நீயும்
ரசிக்கிறேன் உனை நானும்
ஊடலிலும்
தேடலிலும்
ஊடுருவி
கொ(ல்)ள்கிறாய்
ஒருமுறை உனை காண
பலமுறை காதல் மனு
கொடுக்கிறேன் கடவுளிடம்
கருணை காட்டென்று
மனமெங்கும்
உன் நினைவுகள்
எனை தந்தியின்றியே
மீட்டி கொண்டிருக்கு
காதல் ஸ்வரங்களோடு
வீணையாய்
பற்றிக்கொண்டேன் கையை
கொடுத்தாய் நம்பிக்கையை
எதுவான போதும்
நொடியேனும் பிரியேனென்று
மறுவார்த்தை பேசாதே
என்றவன்
விழி வார்த்தையை
ரசித்தான்
நிறுத்தாதே என்று
கட்டுண்டு
கிடக்க பிடிக்கும்
உன் கரங்கள்
கயிறானால் காதலில்
துரத்தும் அலையாய்
நீ ஒதுங்கும்
கரையாய்
நான் காதலில்
கலந்தே கரைந்தே
மனதோடு மறைத்து
வைத்த காதல்
கிளையில் இலையாய்
படர்கிறது
கண்களுனை கண்டு
விட்டால் விழிகளில்
யாருக்கும் கிடைத்திடாத
அன்பாய் இரு
எனக்கு மட்டும்
சொந்தமானவ(ள)னாய்
என் பிரிவு
உனக்கு இனிக்குமென்றால்
சென்றுவிடு எனக்கு
அது கசந்தாலும்
சரியே
என் மௌனங்களோடு
காத்திருக்கிறேன்
உன் வார்த்தை வரம்தரவேனும்
வா...!
உன் கண்களை
மட்டும் மூடிக்கொள்ளாதே
ஏனென்றால்
என் கவிதைக்கு
உன் காதல்
தெரியாமல் போய்விடுமல்லவா
கடிகார
நொடிமுள்ளாய்
உன்னுள் சுழலவைத்து
விட்டாய் அன்பில்
ஊடலில்
கடந்துபோன
நாட்களையும்
மீட்டெடு
நாழிகை போதவில்லை
காதலிக்க...!
அடிக்கடி
தொலைப்பதும்
உன்னை நொடிக்கொருமுறை
தேடுவதும் உன்னை
எந்த இழப்பையும்
தாங்கிக்கொள்வேன்
உன்னைதவிர
நிஜம்
நிழலாகும்போது
நினைவுகள்
நிரந்தரமாகின்றது
உன்னிடம் மட்டும்
என் கோபங்கள்
நீடிப்பதேயில்லை
மனம்
சாயும் போதெல்லாம்
தாங்கி கொள்கின்றாய்
நீ...!
வார்த்தைகளில்
வதைத்துவிட்டு
வரிகளில் சமாதானம்
செய்கிறாய்...!
விலகாமல்
நீயிரு விழியோடு
நானிருப்பேன்
எத்தனை
புகைப்படம் எடுத்தாலும்
என் விழிகளிலாடும்
உன் நிழல்படத்தைப்போல்
எதுவும் அழகில்லை
தடைகளில்லாத
போதும்
தடுப்புச்சுவர்
போடுது நாணம்
உனக்கு
என்னை பிடித்ததிலிருந்து
நானுமென்னை
அடிக்கடி ரசித்து
கொள்கின்றேன்
எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி
ஏமாற்றத்தை
பரிசளிக்கிறாய்
கொஞ்சம்
கலந்த பொய்யில்
உன் கொஞ்சல்
மொழியும் அழகு
கவிதையைபோல்
உன் மார்பில்
தஞ்சம் தேடுது
மனம் மரணிக்கும்போது
நீண்ட
இடைவெளிக்குபின்
நெடுந்தூரமொரு
பயணம்
முதல் சந்திப்பைபோல்
ஆசை
அலையிலோர்
முத்த குளியல்...!
உன் அன்பெனும்
நறுமணம் இருக்கும்
வரை நானும்
வாடாத மலரே
பொன்னுமில்லை
அதிக விலையுமில்லையென்றாலும்
கோடிகளை
தாண்டிய மதிப்பு
நீ அன்பாக
வாங்கி தந்ததால்
காலத்தின் மதிப்பு
தெரிந்தாலும்
உனக்காக கரையும்
நிமிடங்களை
தடுக்க முடியவில்லை
சிக்கலில்
மாட்டிக்கொண்டாலும்
மகிழ்ச்சியே
தீர்த்துவைப்பது
நீயென்பதால்
சேமித்து வைத்த
உன் நினைவுகளை
சிறுக
செலவழிக்கின்றேன்
நீயில்லா பொழுதுகளில்
நிறமற்ற
உன் நிஜத்தில்
என் வாழ்வும்
வண்ணமானது
வெண்மதி ஒளியில்
உன் மதிக்காண
பௌர்ணமி
நிலவாய் காத்திருக்கேன்
புயலாய் மோதும்
உன் மூச்சுக்காற்றில்
சிக்கி திணறிப்போகிறேன்
நானும்...!
தென்றல்
தீண்ட சாயும்
நாணலாய்
உன் அன்பினீர்ப்பில்
சாய்கிறேன் நானும்...!
உனைக்காண
காத்திருக்கும் தருணம்
மனதும் இனிதாய்
மலரும்...!
வாழ்கின்றேன்
என்பதைவிட
உன்னால்
வாழ்கின்றேன்
என்பதே நிஜம்
முழுமதிக்காண
அனுமதியில்லை
நீயென் முகவரியாகுமுன்
மலரிலும்
மென்மையான
உன்னன்பில்
மீண்டும்
நான் ஜனனிக்கின்றேன்
புதிதாய்...!
இதயம் கையளவு
நம் காதலதில்
கடலிலும் ஆழம்
இறந்தகாலத்தை
மறக்கவைக்கும்
என் எதிர்காலம்
நீ...!
உன் சாயலிலொரு
முகம்
என் கண்முன்
நிறுத்திசெல்கிறது
உன்னை...!
அழிக்க துடிக்கும்
அலையைபோல்
மனதில் பதிந்த
(சு) வடுகளையும்
அழிக்கமுடியாமல்
தத்தளிக்கின்றேன்
அன்று
தரையில் நடைபயில
நம்பிக்கையெனும்
கரம் கொடுத்தார்
தந்தை...!
இன்று வாழ்க்கையெனும்
பாதையில் பயணிக்க
அன்புகரம் கொடுக்கின்றாய்
நீ...!
நானுன்
சொந்தமானபின்னும்
ஏனோ அடிக்கடி
திரைபோடுகிறது
நாணம்...!
என்
ஒவ்வொரு
செயலிலும்
நீயே கலந்திருக்கின்றாய்...!
மரக்கிளையில்
மறைந்திருந்த
மழை துளிகளையும்
தட்டியெழுப்புகிறான்
மழையில் நனைய
எனக்கு பிடிக்குமென்று...!
உனை
கண்டாலே
என் மனதிலும்
பலவண்ண
தோரணங்கள்...!
கொன்றுவிட
நினைக்கிறேன்
நினைவுகளை
அவை என்னையே
வென்றுவிடுகிறது
உன் இடம்
வெறுமையானதால்
நாழிகையும்
நகர்கிறது
மெதுவாய்
இரவும் அழகு
உன்னுடன் சேர்ந்து
நிலவை ரசிக்கும்போது...!
நானும்
ஒரு கூண்டுக்கிளியே
உன் அன்பெனும்
கூண்டில் அடைப்பட்ட
காற்றிலும்
வாசம் செய்கின்றாய்
சுவாசத்தில் கலந்து
எங்கும் நிறைந்தவனாய்
விட்டுவிடாதே
என் கரத்தை
குறைந்திடுமே
என் ஆயுள்
ரேகையும்
காதலில்
விழிமொழி
அழகென்றேன் அவனோ
இதுவும் காதல்தானென
கண்களில்
இதழ் பதித்து
சென்றான்...!
அனைத்துமிருந்தும்
எதுவுமில்லாத
மனநிலை
நீயில்லாததால்
அருகில்
பாதை
போகும் போக்கில்
பாதம் போனாலும்
என் விழிகள்
தொடர்வது
உன்னையே
வீழ்த்தும்
ஆயுதம்
விழிகளென
தெளிவாகவே
புரிந்துவைத்துள்ளான்
துன்பமும்
இன்பமாகும்
உன் கரம்
கண்ணீரை
துடைக்கும் போது
மூழ்கி போனேன்
உன்னில்
மீழுமெண்ணம்
இல்லை
இருவரி
கவிதையும்
பிடிக்கும்
அதுவுன்
விழிகளென்றால்
நொடியேனும்
இமைக்கவிடாது
துரத்திக்கொண்டிருக்கு
உன் நினைவுகளென்னை
கடிகார முட்களாய்
உன் கரமும்
மாலையாக
தொலைந்தேன்
நானும்
மெல்ல
விழிகளுக்குள் நீ
விழித்திருக்க
உறக்கமென்பதும்
எனக்கேது
ரகசியமாய்
மனதில் நுழைந்து
என்னை
உன் ரசிகையாக்கி
சென்றாய்
என் நலனே
உன் மகிழ்ச்சி
என்பதால்
இப்போதெல்லாம்
அதிகமாய்
வேண்டிக்கொள்கிறேன்
நமக்காக
மூழ்கினேனா
மூழ்கடிக்கபட்டேனா
எதுவென்றாலும்
மகிழ்வே
உன்(னில்)னால்
என்பதால்
மரத்தில்
படர்ந்த கொடியாய்
படர்ந்துவிட்டாய்
மனதில்
அன்பில்
நினைத்து...!
தீண்டும்
உன்னிதழால்
நாணம்
கொண்டு
சிவக்கின்றது
மருதாணியும்
தழுவும்
உன் சுவாச
காற்றில்
நானும் மறந்தேன்
ஸ்வரங்களை
மௌனமாய்
நீயிருக்க
மனதை கொல்லுது
உன் நினைவு
என்னுள்
நடமாடும்
உயிர்
புள்ளி நீ
எதற்காகவும்
காத்திருக்காத
கண்களின்று
காத்தருக்கு
உனக்காக
உனைக்காணும்
ஆவலில்...
உன்
அனல் பார்வையில்
தணலானது விழிகளும்
விடிந்தபின்னும்
மறையாத
நிலவாக
நீ நகர்ந்தபின்பும்
நிழலாக
உன் பிம்பம்
என்னுள் சுற்றுது
என்னுடன் பயணிக்கும்
நிழலாய் எப்போதும்
நீ வேண்டும்
என் கண்ணீருக்கு
ஆயிரம் காரணங்கள்
இருக்க
என் சிரிப்பிற்கு
நீ மட்டுமே காரணமாய்
இருக்கின்றாய்
எத்தனையோ நினைவுகளை
கடந்து சென்றும்
என்னில் நீ மட்டும்
நிலைத்தது ஏனோ
என் மனம் படும்பாடு இரவில் தூக்கம் இன்றி தவிக்கிறேனடி உன் நினைவால் என் மனம் ஏங்குகிறதடி.
You must be logged in to post a comment.