சென்னை: தமிழகத்தில் இன்றுமே 07 முதல் வரும் 11ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும்.மீனவர்கள், வரும் 07 ம் தேதி அந்தமான் கடல் மற்றும் அதனைஒட்டிய தென்கிழக்கு மத்திய கிழக்கு வங்ககடல் பகுதிக்கும், 08 ல் தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிக்கும், 09 ல் மத்திய வங்க கடல் பகுதிக்கும் 10ல் மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிக்கும், 11ல் வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிக்கும், ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடல், மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும், இது வரும் 10ம் தேதி காலை வட ஆந்திரா ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு, வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும்.இதன் காரணமாக இன்றும்(மே 7, மே8) தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மே 09ல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மே 10 மற்றும்11ல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 - 3டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்
இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும், இது வரும் 10ம் தேதி காலை வட ஆந்திரா ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு, வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும்.இதன் காரணமாக இன்றும்(மே 7, மே8) தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மே 09ல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மே 10 மற்றும்11ல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 - 3டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பிரித்தானியாவில் அழகிய இளம்பெண்கள் இருவர் வந்து வீட்டின் கதவைத் தட்ட, திறந்த நபருக்கு தனக்கு ஏற்படப்போகும் இழப்பைக் குறித்து கொஞ்சமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கிலாந்திலுள்ள என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றின் கதவை இரண்டு இளம்பெண்கள் தட்டியிருக்கிறார்கள்.
அந்த வீட்டின் உரிமையாளர் கதவைத் திறக்க, தாங்கள் வீடுகளை சுத்தம் செய்பவர்கள் என்று கூறியிருக்கிறார்கள் அந்த பெண்கள்.
ஒரு பெண் தன் மொபைல் எண்ணைக் கொடுப்பதற்காக ஒரு துண்டுக் காகிதம் வேண்டும் என்று கேட்க, அந்த நபர் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து அந்த பெண்களும் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள்.
ஒரு பெண் அந்த நபர் கொடுத்த காகிதத்தில் ஏதோ ஒரு எண்ணை எழுத, மற்ற இளம்பெண் அந்த நபரைக் கட்டியணைத்திருக்கிறார்.
பிறகு முதல் பெண் ஏதோ ஒரு எண் எழுதப்பட்ட காகிதத்தைக் கொடுக்க, இருவருமாக அங்கிருந்து வேகமாக வெளியேறியிருக்கிறார்கள்.
பிறகுதான் அந்த நபர் தனது கையிலிருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் மாயமாகியிருப்பதை உணர்ந்திருக்கிறார்.
You must be logged in to post a comment.