சென்னைக்கு அருகே 320 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல்- இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது
புயல் தாக்குவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
• புயல் தாக்கும் பகுதியில் இருப்பின், உங்களுக்கான அடிப்படை ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
• வீடுகளின் நிலையை உறுதியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஓடு, ஆஸ்பெடாஸ் போன்ற மேற்கூரை இருப்பின் அதன் கூரை திருகுகள் சரியாக இருக்கின்றனவா என்பதை சோதித்துக் கொள்ளவேண்டும்.
• வீட்டருகில் மரம் இருப்பின், வீடு மேல் அதன் கிளை விழும் அபாயம் உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ளவும்.
• உங்கள் சுற்றத்தாருக்கு புயல் எச்சரிக்கை பற்றி தெரியவில்லை எனில் தெரியப்படுத்துங்கள்.
• அவசரகால உபகரணங்களை அருகில் வைத்துக் கொள்ளவும்.
• பேட்டரி ரேடியோ மூலம் புயல் தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
• இனி பாதிப்பு இல்லை என கூறும் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்.
• புயலுக்கு பின் என்ன செய்யவேண்டும் :
. • ஈரமான கையுடன் மின்சாதனத்தை ஆன் செய்யாதீர்கள்
. • தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அல்லது சுத்திகரித்து பின் குடிக்கவும்ம்.
• மின்சார வயர் மீது மரம் முறிந்து விழுந்திருந்தால் அருகில் செல்லாதீர்கள்
You must be logged in to post a comment.